Tuesday, June 02, 2009

தேவை ஒரு அகோரி...!!!


எங்கோ தூர தேசத்தில் உட்கார்ந்து காலாட்டிகொண்டு பேசமுடிகிறது...

வாழ்வின் அனர்த்தங்களை பற்றி...!!!
வன்முறை, பயங்கரவாதம், சூன்ய வாதம்,
பிழைப்பு வாதம், பக்க வாதம், இன்னும் பிற...

ஒன்றிரண்டல்ல, ஓராயிரம் மட்டுமல்ல....
20,000 பேர் படுகொலை ஒரே நாளில்.
இனி பேசுதற்கு ஒன்றும்(எவரும்) இல்லை...!!!

ஆமாம்... நீங்கள் பேச நிறையவே இருக்கிறது
மனித உரிமை, மற்றும் நேயம்,
நல்லுறவு, பல்லுறவு, கூட்டுறவு
இருதரப்பு பேச்சுவார்த்தைகள்...
அப்புறம்...., ம்ம்... இதை மறந்துவிட்டேனே,
இந்த எழவெடுத்த இறையாண்மை...!!!