Monday, February 01, 2010

அரவம் விழித்த இரவொன்றில்...!!!


கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து தின்று
கொண்டிருக்கின்றன.

மனமென்ற மெத்தை, அதன் சடுதியற்ற சலனத்தின்
மெலிதான காணமொன்றில் ஏறிப்படர்ந்த இவை காத்திருந்தன,
விழிப்பு கரைந்திருந்த இரவொன்றின் வருகைக்காய்...

தனியாக இருப்பதாயும், கேட்பாரற்ற அவலம்
கேட்பாரில்லையோ -- இது போல சில
'நான்'-இருக்கத் தானே சர்வமும் - என்பதாய் பல

இடம் பிடித்தன நெருக்கமாய்,
என்னைவிட என்னிடம் - பின்
மெதுவாய் விழைந்தன
உடம்பிடம் உரையாட

விழிப்பெனை நெருங்குமுன்
உயிர் ருசித்தறியும் நோக்குடன்
இன்னும் தின்று கொண்டுதானிருக்கின்றன
கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து.

பிறிதொரு நாளில் தான் புரிந்தது - ஆயினும்
இல்லாதவொன்றை இழப்பதெப்படி...?
மெத்தையை மொத்தமுமாய்
கர்மத்தீயில் தொலைக்காதவரை.