Tuesday, September 16, 2008

கேள்வி: பகுத்தறிவாளர்களுக்கு...!!!


அனைவரும் விரும்புவது ஒரே ஒரு விஷயத்தைதான், Happyness.

இதை எல்லோரும் அவரவர்களுக்கு தெரிந்த வகையில் அடைவதற்கு முயற்சிக்கின்றனர். ஒருவர்க்கு இது பணம், மற்றொருவர்க்கு பதவி, இன்னோருவருக்கு உறவு..... அடிப்படையில் அனைவரின் நோக்கமும் ஒன்றே.

இங்கு முக்கியமாய் கவனிக்க வேண்டிய ஒன்று எங்கிருந்து இதை ஆரம்பிப்பது? எது சரி, எது தவறு?

அரசாங்கம் தவறு செய்பவர்களுக்கு (only for physical actions)தண்டனை கொடுக்கிறது (தவறு செய்யாத பலவீனர்களும் scape goats தண்டிக்கப்படுகிறார்கள் என்பது வேறுவிஷயம்).

தவறான எண்ணம் உள்ளதனால் மட்டுமே ஒருவரை தண்டிக்கமுடியாது. அது செயல்படுத்தப்பட்டால் மட்டுமே தண்டனை.....செயல்படுத்தினால் கூட இல்லை, பிடிபட்டால் மட்டுமே தண்டனை.

உங்களிடம் பணமோ, செல்வாக்கோ இருக்கும்பட்சத்தில் பிடிபட்டால் கூட தண்டனை இல்லை.

இப்படியாக நாம் வளர்ந்துவரும் இந்த சூழலில், புத்திசாலியாகவும், பலசாலியாகவும் இருப்பதே வாழ்வை இன்பமாக ஆக்கிக்கொள்ளும் அறிவுப்பூர்வமான வழி.

இதில் நல்லவர்களாக வாழவேண்டியதன் அவசியத்தை விளக்குமாறு பாவ, புண்ணியங்கள் மற்றும் இறைவன் பற்றிய பயங்கள் தவிர்த்த பகுத்தறிவாளர்களிடம் கேட்கிறேன்.

மறுபிறப்பு, இறை தண்டனை என்றெல்லாம் கும்மியடிக்காமல் அறிவுப்பூர்வமாக இருந்தால் ஆன்மிகவாதிகளும் பதிலளிக்கலாம்.

Sunday, September 07, 2008

மதம் பிடித்தவர்களுக்கு...!


நதிக்கரை தோன்றி, சமவெளி நோக்கி
மனிதம் பாய்ந்த காலம் முதலாக
நடந்து கொண்டுதானிருக்கிறது இந்த
மதம் பிடித்த மனித விளையாட்டு

மதத்திற்குள் புகுந்து ஞானத்தை
தேடிக் கொண்டே இருங்கள்
பூமியின் வெளிக்கு அப்பால்
கிழக்கு மேற்கு தேடுவது போல

சமயங்களும் சம்பிரதாயங்களும்
ஒட்டிக் கொண்டு விட்டன சமூகத்துடன்
உடம்போடு ஒட்டிக் கொண்ட
வியாதியைப் போலவே

எங்கோ ஓர் மனிதனின் விசித்திர
கற்பனையில் பிரசவித்த கடவுள் கையில்
சகல உயிர்களும் சர்வ பத்திரமாய்

சுய ஒழுக்கம் .. அப்படீன்னா?
தொழில் தர்மம் .. தேவையே இல்லை
பிழைக்கத் தெரிந்திருந்தால் போதுமானது!

புண்ணியம் போதவில்லையென்றால் ..
இருக்கவே செய்கிறது கோயில் உண்டியல்.

தரிசனமென்பது தனிமனித சாத்தியமே அன்றி
கோஷமிட்டு அலையும் கூட்டத்திற்கு அல்ல,
அது காவி அணிந்திருப்பினும் சரி
கருப்பு அணிந்திருப்பினும் சரி.

மனித அபத்தங்களுக்குத் தீர்வான
ஞானச்சரக்கு எந்தக் கடையிலும்( மத அமைப்பிலும்)மொத்த விலைக்கு இல்லவே இல்லை.
சமைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கானதை
நீங்களாகவே...

விடியும் வரைக்குமென்றாலும் விழித்தே இருங்கள்
விடுதலைக்கான கீறல் விண்ணில் தெரியும் வரை...

இல்லையேல் ..?

பச்சையோ,வெள்ளையோ
காவியோ, கருப்போ - உடுத்திக் கொண்டு
கிளம்பலாம் வாருங்கள் - நமக்குப் பிடித்த மதத்தைபிறர்க்கும் பிடிக்கச் செய்ய ...

கேள்வி: குமரன், மதுரையம்பதி, கீதாம்மா ஞானவெட்டியான் மற்றும் அனைத்து இந்துமத அன்பர்களுக்கும்...!!!

இந்து சமயத்துக்கு வலையில் விவரித்தும், விளக்கமும் அளித்துக்கொண்டிருக்கும் குமரன், மதுரையம்பதி, கீதாம்மா, நா.கண்ணன், ஓம்கார் மற்றும் ஞானவெட்டியான் இன்னும் பலர்....இவர்கள் கீழ்கண்ட கோவிகண்ணன் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தால் அனைவர்க்கும் மிக்க பலனுள்ளதாயிருக்கும்.

1. கர்மா அற்ற நிலையில் ஆன்மாவுக்கு பிறப்பு உண்டா ?

எனது பதில்:

என் புரிதலுக்குத் தெரிந்தவரை, ஆன்மா விரும்பும் பட்சத்தில், கர்மா இல்லாத நிலையிலும் பிறப்பு சாத்யமே. கடவுளின் அவதாரங்கள் அனைத்தும் இங்கனம் ஏற்பட்டதாய் நினைக்கிறேன். இத்தகைய பிறப்பு விருப்பபட்டு எடுப்பது.நமது பிறப்பு, மீதமுள்ள கர்மாவின் விளைவு (Not our choice).

If someone knows better, please corrct me.

கோவியின் எதிர்வினை:

ஆன்மாவில் கர்மமற்ற நிலையில் எண்ண அலைகளே இருக்காது பிறகு எப்படி விருப்பம் தோன்றி பிறப்பு எடுக்க முடியும் ? முக்தி அடைவது என்றால் என்ன ? முக்தி அடைந்தவர் பிறக்க முடியுமா ?

இதற்கு உங்களின் பதில் தேவை.

கோவி அவர்களின் இரண்டாவது கேள்வியைப் பார்ப்போம்.

2. ஒரு ஆன்மா முதன் முதலில் பிறப்பெடுக்கும் (முதல் பிறவிக்கு) முன் அதன் எந்த கர்ம வினை அதன் பிறப்புக்கு காரணமானது ?

எனது பதில்

சொன்னால் நம்பமாட்டீர்கள். சரியாக 8 நாட்களுக்குமுன் நான் சந்தித்த இந்து சமய ஆன்மீக பெரியவரிடம் நான் இதே கேள்வியை கேட்டிருந்தேன்.

அவர் சொன்ன பதில் இது. முதல் என்றோ, முடிவென்றோ எதுவும் இல்லை. இது ஒரு cyclic event. அதேபோல் பிறப்பு/ இறப்பு என்றும் எதுவும் இல்லை. அனைத்தும் நிகழ்வது நம் கற்பனையில், அதிலிருந்து விழித்தெழும்போது இது முடிவுக்கு வருகிறது.

கவலைப்படாதீர்கள். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

கோவியின் எதிர்வினை:



பிறப்பு / இறப்பு உடல் தொடர்புடையது தானே, அது உண்மையும் கூட அதை எப்படி கற்பனை என்று சொல்ல முடியும் ? ஆன்மா என்று இருப்பதே பிறப்பின் பயனாகத்தானே அறிய முடியும் ? பிறப்பற்ற நிலையில் தன்னைத் தான் உணர்வது சாத்தியமா ? வெளிச்சம் எதன் மீது படவில்லை என்றால் வெளிச்சம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே முடியாது தானே.

இதற்கும் உங்களின் பதில் தேவை.

Friday, September 05, 2008

கேள்வி: இஸ்லாமிய அன்பர்களுக்கு...!!!

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.



உங்களுக்கு ஒரு கேள்வி.



திருகுரான் என்ற ஒரு புத்தகத்தையோ அல்லாஹ் என்பதையோ கேட்டறிய வாய்ப்பில்லாத, ஆப்பிரிக்க காட்டில் வசிக்கும் ஒரு காட்டுவாசிக்கு, வாழ்நாள் முடிந்தபின் சொர்க்கமா? நரகமா? ஏன் என்றும் விளக்கவும்.

நான் கூறும் காட்டுவாசிக்கு இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாது. கடவுள் பற்றி எதுவும் தெரியாது. ஒரு இறை கொள்கை, பல இறை கொள்கை என புரிந்துகொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. திருக்குரான் பற்றியோ, ஒரு கடவுள் பற்றியோ அந்த காட்டுவாசி சமூகத்திற்கு சொல்வதற்கு யாருமில்லை.

இவ்வாறாக வாழ்கையை கழித்தபின் அவர்க்கு சொர்க்கமா? நரகமா? ஏன்?