Monday, February 01, 2010

அரவம் விழித்த இரவொன்றில்...!!!


கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து தின்று
கொண்டிருக்கின்றன.

மனமென்ற மெத்தை, அதன் சடுதியற்ற சலனத்தின்
மெலிதான காணமொன்றில் ஏறிப்படர்ந்த இவை காத்திருந்தன,
விழிப்பு கரைந்திருந்த இரவொன்றின் வருகைக்காய்...

தனியாக இருப்பதாயும், கேட்பாரற்ற அவலம்
கேட்பாரில்லையோ -- இது போல சில
'நான்'-இருக்கத் தானே சர்வமும் - என்பதாய் பல

இடம் பிடித்தன நெருக்கமாய்,
என்னைவிட என்னிடம் - பின்
மெதுவாய் விழைந்தன
உடம்பிடம் உரையாட

விழிப்பெனை நெருங்குமுன்
உயிர் ருசித்தறியும் நோக்குடன்
இன்னும் தின்று கொண்டுதானிருக்கின்றன
கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து.

பிறிதொரு நாளில் தான் புரிந்தது - ஆயினும்
இல்லாதவொன்றை இழப்பதெப்படி...?
மெத்தையை மொத்தமுமாய்
கர்மத்தீயில் தொலைக்காதவரை.




Friday, January 22, 2010

எக்கேடுங் கெட்டு போங்க....

WHO -scam பத்தி படிச்சிங்களா... http://thatstamil.oneindia.in/news/2010/01/22/india-asks-who-explain-swine-flu.html எப்பிடிப்பட்ட பயங்கரமான உலகத்துல நாம வாழ்ந்திட்டிருக்கோம், நம்ம புள்ள குட்டிகளுக்கெல்லாம் இவங்க சொல்றத நம்பி மருந்து கொடுக்கிறோமே, ரொம்ப பயமாயிருக்கு.....



காய்கறி, பழங்கள் எல்லாம் ஏற்கனவே
மரபணு மாற்றம், ரசாயன உரத்தால நஞ்சாயிட்டுது.
மண்ணே விஷமாகி போச்சு...!!!

தண்ணி நிலத்துக்கு மேல இருந்தா சாக்கடைய கலக்குறோம்,
இல்லாட்டி சாயப்பட்டறை.
தண்ணி நிலத்தடில இருந்தா கோக், பெப்சி-கோலா

7 - தலைமுறைக்கு உண்டான காற்று மண்டலத்த நாசம் பண்ணியாச்சு....
சுத்தி-முத்தி இருக்கற எல்லா மிருகங்களையும்
ஆராய்ச்சி பண்றேன்னு போட்டுத் தாக்குவோம் - மிச்சம் எதானுமிருந்தா
தின்னு தீப்போம்.

சிக்கன்-குனியா, மட்டன் -மணியா - அப்பொறம்
எலிப்புளுக்கை காச்சல்-னு அலறுவோம் - ஆஸ்பத்திரிக்கு ஓடினா...
அங்க ஒன்ன மாதிரி ஒருத்தன் போட்டு தாக்குவான்.
அடா, அடா......என்ன அமோகமான வாழ்க்கை?

அதுனால என்ன ??? அதான் விட்டுட்டு போறமே ..... LCD -டிவி, microwave ,nano-tech , laptop for everyone , ....etc, etc



இதுக்கும் மேல என்னதான் வேணும்
வருங்கால தலைமுறைக்கு....!!!

Monday, January 11, 2010

கேள்வி-பதில்


பதில்கள் சிறிதும் களைப்பின்றி
தேடியலைகின்றன....
அதனதற்கான கேள்விகளைத் தேடி,

பதில் தெரியாத கேள்விகளை விட
கேள்வியறியா பதில்களின் பாடு ?
தூரத்தில் வந்து அறைகிறது...

விடையற்றதொரு வினாவை தேடியலையும்
என்னிடத்தில் "நான்" சொன்னேன்,
அழைக்க மட்டுமே முடியும் உன்னை
பதில்கள் தெரியா கேள்விகளின் உலகிற்கு.

முடிந்தாலும் முடியலாம் பயணம்
கேள்வி/பதில் அகன்றதொரு அர்த்தமற்ற வெளியில்,

அல்லது மீண்டும் தொடங்கலாம்
"எதற்கிதெல்லாம் ???" என்ற மற்றுறொன்றுடன்...