Thursday, October 29, 2009

உலகத்தமிழ் மாநாட்டின் உடனடித்தேவை...!!!


தன்மானச் சிங்கம், தமிழினதலைவர் ..... ம்ம்ம், இன்னும் இருக்கு பாருங்க நம்பிக்கை.

முன்னாடில்லாம் சோனியா அம்மையாருக்கு(மட்டும்?)தான் இந்த மாதிரி, இப்பொ அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்க்கு கூடவா ?? சும்மா ...புல்லரிக்குது தலைவா.....ரொம்ம்ம்ம்ம்ப பெருமையா இருக்கு.

அட ராமதாஸே தேவல....தலைவர் காங்கிரஸ்க்கு போடர கும்பிட பாத்தா ரொம்ப பரிதாபமா இருக்கு. இந்த மாதிரி பிறவிகள் பெரியார் பெயரை நா-கூசாம சொல்ரது இன்னும் வேதனை, ஆமா.... சுய-மரியாதை-னா என்ன?

ஈழத்தமிழர்கள் ஆஸ்த்ரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவுல கடல்ல தத்தளிக்கறாங்களாமே...... தலைவர் ஒரு நாளக்கி 16 news paper படிப்பாராமே? இந்த news தெரியாதா ? "ஓ...." sun-TV -ல மானாட-மயிலாட நிகழ்ச்சியை நேர்ல ரசிச்சுகிட்டு இருக்காரா, இருக்கட்டும் பாவம், disturb பண்ணகூடாது. 8 கோடி தமிழர்க்கும் தலைவராமே.......அதாங் கேட்டேன். நல்லா இருக்கட்டும்.

இந்த லட்சணத்துல உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வேர ....வேண்டியதுதான், தமிழனெல்லாம் செத்து, மேட்டுல புல்லு மொளச்சாச்சு, அப்பொறம் எவனெ வெச்சு விழா கொண்டாடரது?.....ஓ....sun-TV - க்கு news, விளம்பரம், பணம் பண்ண வேண்டாமா தலைவர் குடும்பம்...நடக்கட்டும், உலகத்தமிழ் மாநாடு கண்டிப்பா வேணும்.

வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு .....!!!
இந்த பாட்டெ ஒவ்வொரு வெள்ளிக்கெளெமயும் நான் படிச்ச கிராமத்து பள்ளிகூடத்திலெ பாடுவோம். இன்னும் கண்ணுக்குள்ளெயே நிக்குது.
ரொம்ப கேக்கல....கடல்ல நிராதரவா விடப்பட்ட சீவங்கெளுக்கு ஒதுங்கரதுக்கு ஒரு எடமும், பிள்ளங்க வயித்துக்கு கொஞ்சம் சோரு. இது அதிகமோ ?
September-ல சன் டிவியோட லாபம் 20% அதிகமாமே ? நெசமா ??