Saturday, February 17, 2007

தனிமை

வீட்டில் விளக்கு வைத்துவிட்டு
காத்திருக்கிறது எனக்கான தனிமை

தனித்திருந்த பொழுதெல்லாம் துணைக்கிருந்தன காப்பியங்களும் சிரிதளவு காமமும்

எப்பொதேனும் சிலருக்கு வேண்டியிருக்கும் இத்தனிமை நிரந்தரமாய் தேங்கியிருகிறதெனை தேடிவந்து

நாட்கள் நகர்வதும் பின் உதிர்வதுமாய்
நிகழ்வு குவியல்கள் மீது
நீண்டு மீள்கிறதென் காலம்

என்ன யோசித்தும் விளங்கவேயில்லை...!!!,
தனித்திருக்க என்ன இருக்கிறது?
ஏதுமற்ற சூனியத்தில்...!!!