Friday, December 23, 2011

வீணாப்போன விலங்கு

ஒன்றும் செய்ய முடிவதில்லை ,
ஓடுவதையும் நிறுத்த முடியவில்லை ,
பாழாய் போன எண்ணங்கள் .

விளங்கவியலா வாழ்வதனை
நிரப்பிக்கொள்ள இருக்கிறது இடம், காலம்.
அது எதுவானால் என்ன?

மனித விலங்கு மட்டும்
இன்னும் அலைகிறது
பசி, உறக்கம் தாண்டிய தத்துவம் தேடி