Tuesday, September 26, 2006



யார் கடவுள்?

ஆழ்ந்த உறக்கத்தினூடே விழித்தெழுந்தது போலெழுந்து அமர்ந்து கொண்டது அடி நெஞ்சில் கேள்வியொன்று...!

படைப்பனைத்தும் முடித்துவைத்த பரம்பொருளே ஆகிடினும்
இயங்குலகின் இயக்கமதை மாற்றவியலா இறையென்றால் இருந்தும் அதை நீர் வணங்குவீரோ?

"ஆம்" எனில் நீர் வணங்கவேண்டியது ஈசனை அல்ல, உமை இவ்வுலகிற்கு ஈன்றவரை....!

"இல்லை" எனில் வணங்கிச்செல்லும்
அறிவுப்பசி தீர்த்த கல்விச்சாலையையும்
உறுபசி ஒழித்தழித்த உத்தியோகத்தையும்...!

கேள்வி/பதில் எதுவும் புரியலியா?
இதையெல்லாம் கடந்த "அது" வாகவே இருக்கிறாய்
வா....!இப்படி என்னருகில் வந்து உட்கார்.

No comments: