Monday, January 11, 2010

கேள்வி-பதில்


பதில்கள் சிறிதும் களைப்பின்றி
தேடியலைகின்றன....
அதனதற்கான கேள்விகளைத் தேடி,

பதில் தெரியாத கேள்விகளை விட
கேள்வியறியா பதில்களின் பாடு ?
தூரத்தில் வந்து அறைகிறது...

விடையற்றதொரு வினாவை தேடியலையும்
என்னிடத்தில் "நான்" சொன்னேன்,
அழைக்க மட்டுமே முடியும் உன்னை
பதில்கள் தெரியா கேள்விகளின் உலகிற்கு.

முடிந்தாலும் முடியலாம் பயணம்
கேள்வி/பதில் அகன்றதொரு அர்த்தமற்ற வெளியில்,

அல்லது மீண்டும் தொடங்கலாம்
"எதற்கிதெல்லாம் ???" என்ற மற்றுறொன்றுடன்...














No comments: