Friday, January 22, 2010

எக்கேடுங் கெட்டு போங்க....

WHO -scam பத்தி படிச்சிங்களா... http://thatstamil.oneindia.in/news/2010/01/22/india-asks-who-explain-swine-flu.html எப்பிடிப்பட்ட பயங்கரமான உலகத்துல நாம வாழ்ந்திட்டிருக்கோம், நம்ம புள்ள குட்டிகளுக்கெல்லாம் இவங்க சொல்றத நம்பி மருந்து கொடுக்கிறோமே, ரொம்ப பயமாயிருக்கு.....



காய்கறி, பழங்கள் எல்லாம் ஏற்கனவே
மரபணு மாற்றம், ரசாயன உரத்தால நஞ்சாயிட்டுது.
மண்ணே விஷமாகி போச்சு...!!!

தண்ணி நிலத்துக்கு மேல இருந்தா சாக்கடைய கலக்குறோம்,
இல்லாட்டி சாயப்பட்டறை.
தண்ணி நிலத்தடில இருந்தா கோக், பெப்சி-கோலா

7 - தலைமுறைக்கு உண்டான காற்று மண்டலத்த நாசம் பண்ணியாச்சு....
சுத்தி-முத்தி இருக்கற எல்லா மிருகங்களையும்
ஆராய்ச்சி பண்றேன்னு போட்டுத் தாக்குவோம் - மிச்சம் எதானுமிருந்தா
தின்னு தீப்போம்.

சிக்கன்-குனியா, மட்டன் -மணியா - அப்பொறம்
எலிப்புளுக்கை காச்சல்-னு அலறுவோம் - ஆஸ்பத்திரிக்கு ஓடினா...
அங்க ஒன்ன மாதிரி ஒருத்தன் போட்டு தாக்குவான்.
அடா, அடா......என்ன அமோகமான வாழ்க்கை?

அதுனால என்ன ??? அதான் விட்டுட்டு போறமே ..... LCD -டிவி, microwave ,nano-tech , laptop for everyone , ....etc, etc



இதுக்கும் மேல என்னதான் வேணும்
வருங்கால தலைமுறைக்கு....!!!