
இங்கு முக்கியமாய் கவனிக்க வேண்டிய ஒன்று எங்கிருந்து இதை ஆரம்பிப்பது? எது சரி, எது தவறு?
எனது பதில்:
என் புரிதலுக்குத் தெரிந்தவரை, ஆன்மா விரும்பும் பட்சத்தில், கர்மா இல்லாத நிலையிலும் பிறப்பு சாத்யமே. கடவுளின் அவதாரங்கள் அனைத்தும் இங்கனம் ஏற்பட்டதாய் நினைக்கிறேன். இத்தகைய பிறப்பு விருப்பபட்டு எடுப்பது.நமது பிறப்பு, மீதமுள்ள கர்மாவின் விளைவு (Not our choice).
If someone knows better, please corrct me.
கோவியின் எதிர்வினை:
ஆன்மாவில் கர்மமற்ற நிலையில் எண்ண அலைகளே இருக்காது பிறகு எப்படி விருப்பம் தோன்றி பிறப்பு எடுக்க முடியும் ? முக்தி அடைவது என்றால் என்ன ? முக்தி அடைந்தவர் பிறக்க முடியுமா ?எனது பதில்
சொன்னால் நம்பமாட்டீர்கள். சரியாக 8 நாட்களுக்குமுன் நான் சந்தித்த இந்து சமய ஆன்மீக பெரியவரிடம் நான் இதே கேள்வியை கேட்டிருந்தேன்.
அவர் சொன்ன பதில் இது. முதல் என்றோ, முடிவென்றோ எதுவும் இல்லை. இது ஒரு cyclic event. அதேபோல் பிறப்பு/ இறப்பு என்றும் எதுவும் இல்லை. அனைத்தும் நிகழ்வது நம் கற்பனையில், அதிலிருந்து விழித்தெழும்போது இது முடிவுக்கு வருகிறது.
கவலைப்படாதீர்கள். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
கோவியின் எதிர்வினை: