Friday, September 05, 2008

கேள்வி: இஸ்லாமிய அன்பர்களுக்கு...!!!

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.



உங்களுக்கு ஒரு கேள்வி.



திருகுரான் என்ற ஒரு புத்தகத்தையோ அல்லாஹ் என்பதையோ கேட்டறிய வாய்ப்பில்லாத, ஆப்பிரிக்க காட்டில் வசிக்கும் ஒரு காட்டுவாசிக்கு, வாழ்நாள் முடிந்தபின் சொர்க்கமா? நரகமா? ஏன் என்றும் விளக்கவும்.

நான் கூறும் காட்டுவாசிக்கு இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாது. கடவுள் பற்றி எதுவும் தெரியாது. ஒரு இறை கொள்கை, பல இறை கொள்கை என புரிந்துகொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. திருக்குரான் பற்றியோ, ஒரு கடவுள் பற்றியோ அந்த காட்டுவாசி சமூகத்திற்கு சொல்வதற்கு யாருமில்லை.

இவ்வாறாக வாழ்கையை கழித்தபின் அவர்க்கு சொர்க்கமா? நரகமா? ஏன்?

14 comments:

கோவி.கண்ணன் said...

//என் புரிதலுக்குத் தெரிந்தவரை, ஆன்மா விரும்பும் பட்சத்தில், கர்மா இல்லாத நிலையிலும் பிறப்பு சாத்யமே. கடவுளின் அவதாரங்கள் அனைத்தும் இங்கனம் ஏற்பட்டதாய் நினைக்கிறேன். இத்தகைய பிறப்பு விருப்பபட்டு எடுப்பது.

நமது பிறப்பு, மீதமுள்ள கர்மாவின் விளைவு (Not our choice).
If someone knows better, please corrct me.
//

ஆன்மாவில் கர்மமற்ற நிலையில் எண்ண அலைகளே இருக்காது பிறகு எப்படி விருப்பம் தோன்றி பிறப்பு எடுக்க முடியும் ? முக்தி அடைவது என்றால் என்ன ? முக்தி அடைந்தவர் பிறக்க முடியுமா ? அந்த ஆன்மிக பெரியவரிடம் கேட்டுச் சொல்லுங்க.


//சொன்னால் நம்பமாட்டீர்கள். சரியாக 8 நாட்களுக்குமுன் நான் சந்தித்த இந்து சமய ஆன்மீக பெரியவரிடம் நான் இதே கேள்வியை கேட்டிருந்தேன்.//

ஆன்மிக வாதிகள் பலரிடம் கேட்டும் மலுப்பல் தான் வந்திருக்கிறது. கர்மா என்று புனைப்பெயர் வைத்திருக்கிறீர்கள் அதனால் தெரிந்து இருக்கும் என்றே நினைத்தேன்.

//அவர் சொன்ன பதில் இது. முதல் என்றோ, முடிவென்றோ எதுவும் இல்லை. இது ஒரு cyclic event. அதேபோல் பிறப்பு/ இறப்பு என்றும் எதுவும் இல்லை. அனைத்தும் நிகழ்வது நம் கற்பனையில், அதிலிருந்து விழித்தெழும்போது இது முடிவுக்கு வருகிறது.

கவலைப்படாதீர்கள். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.//

:)

பிறப்பு / இறப்பு உடல் தொடர்புடையது தானே, அது உண்மையும் கூட அதை எப்படி கற்பனை என்று சொல்ல முடியும் ? ஆன்மா என்று இருப்பதே பிறப்பின் பயனாகத்தானே அறிய முடியும் ? பிறப்பற்ற நிலையில் தன்னைத் தான் உணர்வது சாத்தியமா ? வெளிச்சம் எதன் மீது படவில்லை என்றால் வெளிச்சம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே முடியாது தானே.

SurveySan said...

God maintains multiple sorgams and naragams based on each individuals belief system and habits.

for eg., if you belong to a non-vegetarian sect, you get to a sorgam which has exquisite chicken biriyani;
if you belong to a vegetarian sect, you get to a sorgam which has exquisite full-vege-thali;
.... and so on....

naragams, function the same way. the punishments will match your beliefs,disbeliefs,feelings. for instance, if you love hot water bath, you wont get to a naragam where the punishment is immersing you in hot water. you will probably end up in a naragam which puts in you in ice-cold water.

so, africans get to sorgam or naragam, whichever fits their lifestyle.

hope i am making sense ;)

p.s: Religion pathi onnume theriyaadha african, uyiroda irukkumbodhe sorgaththaludhaan irukkaan. seththaa, avan enga ponaa enna ?

Unknown said...

கர்மா,

நான் கேள்விகளை கேட்டுள்ளேன், பதில் வந்தவுடன் தாங்களுக்கு தெரிய படுத்துகிறேன்.

நட்புடன்.
--மஸ்தான்.

Anonymous said...

மஸ்தான் அண்ணே,

//About Me
As per the research 8.5 billion peoples are sleeping without night food, what the bad world we are living now, once side peoples are wasting food, other side don’t have it,..........//


உங்கள் தகவலில் சிறு பிழை உள்ளது.

உலகின் மொத்த மக்கள் தொகை சற்றேறக்குரைய 6.7 பில்லியன்.
பார்க்க,

http://en.wikipedia.org/wiki/World_population

அப்படி இருக்கையில் 8.5 பில்லியன் மக்கள் உணவின்றி வாடுவது எங்கனம்?

Unknown said...

/Anonymous said...
மஸ்தான் அண்ணே,

உங்கள் தகவலில் சிறு பிழை உள்ளது.

உலகின் மொத்த மக்கள் தொகை சற்றேறக்குரைய 6.7 பில்லியன்.
பார்க்க,

http://en.wikipedia.org/wiki/World_population

அப்படி இருக்கையில் 8.5 பில்லியன் மக்கள் உணவின்றி வாடுவது எங்கனம்?
/

நன்றிகள் அனானி.

இது சிறு பிழை இல்லை, பெரிய பிழை. :) தவறுகள் திருத்தபடவேண்டியவை. திருத்திவிட்டேன்.

திரும்பவும் நன்றிகள் அனானி.

ஆமா, பேரை போடலாம்லே?

Unknown said...

இதே கேள்வியை நண்பர் கோவி.கண்ணன் கேட்டு நான் அளித்த பதில் கீழே.

//3. உலக தொடர்பே இல்லாமல் காடுகளில் (அமேசான்) காட்டுவாசிகளாக திரியும் மனிதர்களுக்கென்று இறைவன் என்ன சொல்கிறான்? அவர்கள் எந்த துன்பமும் இன்றி வாழ்வதாக நான் கருதுகிறேன்?

எல்லாக் குழந்தைகளும் இயற்கை மதத்திலேயே பிறக்கின்றன. அக்குழந்தைகளுக்கு மதம் கொடுத்தவர்கள் அவர்களின் பெற்றோர்களே என்பது இஸ்லாமிய கோட்பாடு.

அமேசான் காட்டுவாசிகளுக்கும் 'இறைவன் ஒருவன். அவனே வணங்கத் தகுதியானவன்' என்ற உள்ளுணர்வு பிறக்கும்போதே பிறக்கும். இந்த இயற்கை மதத்திலேயே அவர்கள் இருந்து, இறந்தால், அவர்களும் சொர்க்கத்தின் சொந்தங்களே.//

இறைவன் நாடினால் புரியலாம்.

Anonymous said...

//அமேசான் காட்டுவாசிகளுக்கும் 'இறைவன் ஒருவன். அவனே வணங்கத் தகுதியானவன்' என்ற உள்ளுணர்வு பிறக்கும்போதே பிறக்கும். இந்த இயற்கை மதத்திலேயே அவர்கள் இருந்து, இறந்தால், அவர்களும் சொர்க்கத்தின் சொந்தங்களே.//

உலகின் எந்த நாட்டில் இருக்கும் காட்டுவாசியும் யாரும் சொல்லாமல் முஸ்லிம் மதத்தை தெரிந்துகொண்டதாக வரலாறு இல்லை.அதனால் நடக்க சாத்தியம் இல்லாததை எல்லாம் சொல்லாமல் முஸ்லிம் மதத்தை பற்றி தெரியாமல் இறக்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு சொர்க்கமா,நரகமா என்பதை தெளிவுபடுத்துங்கள்.

KARMA said...

கோவி அவர்களே,

உங்கள் இந்து சமயம் பற்றிய கேள்விகளை தொகுத்து இன்னொரு பதிவிட்டு, இந்துமத வலைபதிவர்களை பதிலிடுமாறு கேட்டிருக்கிறேன். என்னுடைய இந்த பதிவு இஸ்லாம் பற்றி மட்டுமே.

சுல்தான் அவர்களே,

தாங்கள் பதிலுக்கு நன்றி. Ironman சொன்னதுதான் என் கருத்தும்கூட. இன்னும் பொருந்தக்கூடிய, மற்றும் ஆழமான பதிலை எதிர்பார்க்கிறோம்.

சீரா said...

இங்கே பதில் உள்ளது
http://veruvelai.blogspot.com

Anonymous said...

Being in Islam only doesnot guarantee that one might get Swargam or Naragam.

The holy Quran says, anyone (not only muslims but jews and christians also(referred as 'people of the book')) who believe in One God and uphold prayers and charity, without indulging in sinful activities are eligible for Swargam. Whoever, either disbelievers (nastikas) or believers in more than one god (christians believing in trinity, multigod worshippers etc)are destined for Naragam.

In this case, for the man (men) in African forest, according to his belief, (by his intuition or whatevr little wisdom he may possess), in no god, one god or multigod, he would be destined.

However, we cannot presume/judge that one is destined for what, since the final decision rests with the 'supreme judge', GOD.

(Please bear it in mind that Allah is not the God muslims only, but an arabic word referring to the Supreme Being, to which no plural exists or can be attributed to, in that language, to insist on the Uniqueness of that being.)

PS: Now bloggers and readers, plz dont blame me for being anonymous, coz I come occasionally to this site for the sake of reading Tamil and Donot wish to open an id for adding to my long list of ids, passwords of which I tend to forget invariably. And I feel its enough for u to know that I am a muslim.

முகவை மைந்தன் said...

//God maintains multiple sorgams and naragams based on each individuals belief system and habits.//

உண்மை. உருவாக்கத்தின் தன்மை உருவாக்கியவர்களைப் பொறுத்ததே! காப்புரிமை அவர்களுடைத்து.

தருமி said...

//..குழந்தைகளுக்கு மதம் கொடுத்தவர்கள் அவர்களின் பெற்றோர்களே ...சுல்தான்//

இது முழு உண்மை. (பொதுவாக) நாம் தேடிச் சேர்வதில்லை நமது மதம்; நம்மின் மீது ஏற்றிவைக்கப்படுவதே நம் மதங்கள்.

தருமி said...

for follow up comments

R.DEVARAJAN said...

ஒரே ஒரு பிறவி மட்டுமே என்று பிடிவாதமாகக் கருதிவரும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மதத்தினருக்கே இக்கேள்வி பொருந்தும்.

பல பிறவிகளில் பரிபக்குவம் ஏற்பட்டபின் மோக்ஷம் என்று கூறும் ஹிந்து மதத்திற்கு இக்கேள்வி பொருந்தாது.

பழங்குடியினரானாலும் அவர்களுக்கான நெறிப்படி செவ்வனே வாழ்ந்து மரித்தால் விவேகம் விழிப்புப்பெற்ற நாகரிகம் மிகுந்த குலங்களில் மறு பிறவி பெறலாம். அப்புதிய பிறவியில் இறையுணர்வுக்கான வாய்ப்பைப் பெறலாம்.

கிடைத்த பிறவிகளை வீண் செய்து கொண்டால் கீதை கூறுவது போல் மூட யோனிகளில் (விலங்கு, பறவை, மரம் போன்றவை) பிறவி கிடைக்கும். மனத்தில் ஆசைகளுடன் நற்செயல்கள் செய்தால் ‘ஸ்வர்கம்’. காமனையின்றிச் செயல் பட்டால் ‘மோக்ஷம்’.
தீங்கிழைப்போருக்குக் கட்டாயம் நரகமே.

‘இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ?’ என ஆன்றோர்கள் பதற்றத்துடன் பாடியுள்ளனர்.

தேவ்